இந்திய உயர்ஸ்தானிகரை கூட்டாக சந்தித்த தமிழ் தரப்பு!

இந்திய தூதரக அழைப்பினையடுத்து தமிழ் தேசிய கட்சிகள் இலங்கைக்கான இந்திய தூதுவரை கொழும்பில் இன்று திங்கட்கிழமை (22) சந்தித்துள்ளன. சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறீதரன், சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோநோகராதலிங்கம், மற்றும் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பில் தமிழர் பகுதியில் தொடரும் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை, அதிகாரம் பகிரப்படாமை, போன்ற […]

யாழில் ரணிலின் வருக்கைக்கு எதிர்ப்பு!!

யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் இப் போராட்டம் இடம்பெற்றது. பழைய பூங்கா அருகில் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களைத் தடுத்தனர். இதேவேளை ரணிலின் யாழ் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ். மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு, அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை […]

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு !

யாழ்ப்பாணத்தில் தந்தை தனக்கு பணம் கொடுக்காததால் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (29.12.2023) இடம்பெற்றுள்ளது. இதன்போது செல்வச்சந்நிதி கோவில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் இளைஞன் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். தந்தை தனக்கு பணம் கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்றையதினம் (29) குறித்த இளைஞன் வீட்டில் தவறான […]

விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி

மறைந்த தென்னிந்திய பிரபல நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த்க்கு யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

தேர்தல் குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை. அத்தோடு தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவு எடுப்போம் எனவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ அதன் […]

கொடிகாமத்தில் வீதியில் இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் – இளைஞனின் வீடு தேடி சென்றும் தாக்குதல்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில், வீதியில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் ஒன்று , இளைஞனின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதி வீதியில், நேற்றைய தினம் புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை வழிமறித்த வன்முறை கும்பல் , இளைஞன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இளைஞன் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு, தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். அதனை அடுத்து இளைஞனின் வீட்டுக்கு சென்ற […]

ஹமாஸ் இராணுவ நிலைகள் சிலவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் – இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் இராணுவ நிலைகள் சிலவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. தற்போது தங்கள் இரண்டாவது கட்டத்துடன் முன்னேறி வருகிறோம் என்றும் இரண்டாவது கட்டம் இராணுவ ரீதியாக கடினமாக இருக்கும் என்றும் இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

ஒதியமலைப் படுகொலை நினைவேந்தலைக் குழப்பிய பொலிஸ்!

ஒதியமலைப் படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நேற்று கடைப்பிடிக்கப்பட்ட போது ஒட்டுசுட்டான் பொலிஸார் நிகழ்வில் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர். 1984ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி அதிகாலைவேளையில் ஒதியமலைக்குள் புகுந்த இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்துக்கு வரவழைத்து அவர்களது ஆடைகளைக் களைந்து 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டனர். இதன் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட […]

துவாரகா விவகாரம் : விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பு அறிக்கை

புலம்பெயர்‌ தேசங்களில்‌ தழிழ்த்தேசியம்‌ சார்பில் இயங்கும் அமைப்புக்களின்‌ செயற்பாடுகளை வலுவிழக்க இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப்‌ புலிகளின் போராளிகள்‌ கட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் உரையாடல் காணொளி வெளியிடப்பட்டது இந்த காணொளி தொடர்பில் போராளிகள்‌ அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது தேசவிடுதலை வரலாற்றை திரிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி அதன்‌ மூலம்‌ ஒட்டுமொத்த தமிழ்‌ […]

ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகக்கூடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

சாணக்கியன், சுமந்திரனின் பசப்பு வார்த்தை! மக்கள் ஏமாறக்கூடாது -கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கில் இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தொடர்ந்தும் ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் […]

மனைவி, மச்சான்…கூண்டோடு உள்ளே!

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண் ஒருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார். முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 20 வாக்குமூலங்கள் பதிவு […]