யாழில் ரணிலின் வருக்கைக்கு எதிர்ப்பு!!

யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் இப் போராட்டம் இடம்பெற்றது.

பழைய பூங்கா அருகில் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களைத் தடுத்தனர்.

இதேவேளை ரணிலின் யாழ் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ். மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு, அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்