கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம்: இருவர் காயம்

கட்டுநாயக்க – ஹினடிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று(வெள்ளிக் கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 மற்றும் 58 வயதுடைய இருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பை அண்டிய பகுதிகளில் துப்பாக்கிபிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனினும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கமும், பொலிஸாரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்