ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்தக் கூட்டமைப்பு மயில் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலர் ஹசன் அலி புதிய கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தோற்கடிக்கும் நோக்கில் களமிறங்கவுள்ளது.