வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ள பசுபதிப்பிள்ளை

வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

குறித்த பாதீட்டில் கிளிநொச்சி தொடர்பில் விஷேட அபிவிருத்தி முறைகள் அல்லது விஷேட வேலைத் திட்டங்கள் குறித்து எதுவும் இல்லாமையே தான் இந்த முடிவு எடுத்தமைக்கான காரணம் என அவர் கூறியுள்ளார்.

வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி தொடர்பில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக, பசுபதிப்பிள்ளை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசுபதிப்பிள்ளை தமிழரசுக் கட்சி சார்பில் வட மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்