மலேஷிய பிரதமர் வடக்கு முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்த மலேஷிய பிரதமர் நஜீப் ரசாக் வடக்கு முதல்வரை இன்று காலை கொழும்பில் சந்தித்துள்ளார்.

இதன்போது வட மாகாணத்தின் மீள் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக மலேஷிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் நலன் திட்டங்களுக்காக உதவி புரிய தாம் தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த அவர் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடதக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்