கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் இன்று விசேட அதிரடி படையினரால் 10.645 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அதிரடிப்படையினர் இணைந்து இன்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, மோட்டர் சைக்கிளில் கடத்தப்பட்ட குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்