எழிலன் உள்ளிட்ட பன்னிருவர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 12 பேரை முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட 12 பேரும் இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக இந்த ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் லெனின் குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர்கள் பலரும் ஆஜராகியிருந்த போதிலும் எதிர்த்தரப்பினர் மன்றில் பிரசன்னமாகாததால், வழக்கு எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்