சாவகச்சேரியில் கூட்டமைப்பு வேட்பாளருக்கு தர்ம அடி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது தென்மராட்சியின் சாவகச்சேரி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பகுதியில் பிரசார நடவடிக்கைக்காக சென்றபோது பொதுமகனொருவரால் இவர் க்குதலுக்குள்ளாகியுள்ளார்.தாக்குதலில் காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு கட்சியின் ஆதரவாளர் வீட்டிற்குள் சென்று பிரச்சார துண்டுபிரசுரங்களை விநியோகிக்க முற்பட்ட வேளையில் தாக்குதல் நடந்துள்ளது.கூட்டமைப்பின் வேட்பாளருடன் சென்ற ஆதரவாளர்கள் தப்பித்தோம் பிழைத்தோமென தப்பியோடிவிட அவர் மட்டும் அகப்பட்டுள்ளார்.தடி மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஏன் இங்கே வந்தாய் எனக்கேட்டு தாக்குதல் நடந்ததாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை வீட்டின் உரிமையாளருடன் இணைந்து அவரது மனைவியும் வேட்பாளரை தாக்கியதாக சொல்லப்படுகின்றது.

அண்மைக்காலமாக கூட்டமைப்பின் வேட்பாளர்களை தமது கிராமங்களினுள் வரக்கூடாதென இளைஞர்கள் அச்சுறுத்தல்விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்