தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்பு

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கண்ணாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தொகுதியில் இவ் பெண் தூக்கில் தொங்கியதை அவதானித்த பொதுமகனொருவர் காவற்துறைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடத்தை மீட்டுள்ளனர்.

சடலம் தற்போதைய நிலையில் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறும் காவற்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்