கூட்டமைப்பு வேட்பாளர் அலுவலகம் மீது தாக்குதல்; மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 03ம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதன் என்பவரின் கொக்குவில் பகுதியிலுள்ள அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 10.30 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், இவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் என தாங்கள் இனங்கண்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அலுவலகத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் கட்சி கொடியினையும் விஷமிகள் எரித்துள்ளதாக முறைப்பாட்டாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்