பிள்ளையானின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! பதாகையும் எரியூட்டப்பட்டது!

பிள்ளையான் என அழைக்கப்படுகின்ற சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஆம் வட்டாரம் கறுவப்பங்கேணி-இருதயபுரத்தில் போட்டியிடும் வேட்பாளரான காந்தன் என்பவரின் அலுவகம் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த தாக்குதல் சம்வம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்