போர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அங்கு 100 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியை அண்டி வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
பிரான்கோ காஸ்டிலோவில் விலா டி ரெய் எனும் காட்டுப்பகுதியே தீக்கிரையாகியுள்ளது.
போர்த்துக்கல்லில் வரட்சியான காலநிலை தற்போது நிலவிவரும் நிலையில், காட்டுத் தீ பரவியுள்ளது.
இந்நிலையில், தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.