கோட்டாவை கைது செய்வதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு!

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த இடைக்கால தடை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தின் நிர்மாணத்தின் போது அரசாங்கத்தினது நிதியைத் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இவருக்கெதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்