கடற்படையினரிடமிருந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஊர்காவற்றுறையில் மக்கள் ஆர்பாட்டம்!

கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, தீவகம் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பினை நிறுத்தக் கோரி கிராம சேவையாளரிடம் மகஜர் ஒன்றும்; கையளிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை அண்டிய பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக காணியின் உரிமையாளர் ஒருவருக்கு கடற்படையினர் காணி திணைக்களத்தினூடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்தே காணி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ‘வேண்டாம் வேண்டாம் காணி சுவீகரிப்பு வேண்டாம்’, ‘எம்மை சொந்த இடத்தில் இருக்கவிடு’, ‘நாங்கள் எங்கள் நிலத்தில் வாழவேண்டும்’ ஆகிய பதாதைகளைத் தாக்கியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடற்படையினர் தற்போது நிலைகொண்டுள்ள இரண்டு பரப்பு காணியுடன் 25 குடும்பங்கள் வாழ்ந்துவந்த 3 ஏக்கர் காணி கடற்படையின் முகாமைச்சுற்றி காணப்படும் நிலையில் குறித்த காணியில் மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் அச்சமாக உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கடற்படையினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமது சொந்த காணிகளில் முகாம்களை அமைத்து நிலைக்கொண்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்