கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டிலும் வவுனியா பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாத ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பொதுக் கூட்டத்திலும், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டிலும் ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டமும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும், குருமன்காடு கலைமகள் மைதானத்தில் தேர்தல் கூட்டமும் நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், புளொட் அமைப்டபின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகந்தா ஆகியோர் கலந்து கொண்ட போதும் வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, குறித்த பொதுக் கூட்டத்தில் வேட்பாளர்களும், அவர்களது உறவினர்களுமே அதிகளவில் கலந்து கொண்டதுடன் மக்கள் தொகையும் குறைவாக காணப்பட்மை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்