மைத்திரியால் வாக்காளர்களுக்கு அச்சுறுத்துத்தல் – ஜி.எல்.பீரிஸ்

மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் என்று பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

”சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும கூட, பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதமரின் ஊடாக நிதி ஒதுக்கப்படாது என்று கூறியிருக்கிறார்.

இது சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வாக்காளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அந்த வாக்குகளை ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பெற முனைகின்றன.

உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்குச் சொந்தமானது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் எதுவானாலும், உள்ளூராட்சி சபைகளுக்கு அவற்றை பங்கிட வேண்டும். அந்த நிதி ஒன்றும் ஜனாதிபதியினுடையதோ, பிரதமரினதோ தனிப்பட்ட சொத்து அல்ல.

நிதி ஒதுக்கீட்டை வெட்டுவோம் என்று எச்சரிப்பது, தேர்தல் சட்ட மீறல். அத்துடன் மக்களின் அடிப்படை உரிமையையும் மீறும் செயல்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்