28 வருடங்களின் பின் பருத்துறை- பொன்னாலை வீதி இன்று திறப்பு.

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த பருத்துறை- பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னர் இன்று திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது.

1990ம் ஆண்டு வலிகாமம் வடக்கு பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இந்த வீதி நிரந்தரமாக மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்ட வீதியாக காணப்பட்டது. இந்நிலையில் அண்மையில் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட பின்னர் பருத்துறை- பொன்னாலை வீதியை திறக்குமாறு மக்கள் கேட்டு வந்திருந்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் மேற்படி வீதி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கின்ற து. இந்த வீதி திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக சுமார் 50 கிலோ மீற்றர்

தூரம் சுற்றி வரவேண்டிய தேவை அற்றுப்போயிருக்கின்றது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்