வட தமிழீழம் தென்மராட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா மையங்களை அமைக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதனடிப்படையில், கச்சாய் துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள சாளம்பன் தீவுப்பகுதியில் சுற்றுலா மையத்தை அமைக்க மாகாண முதலமைச்சு அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியை நிர்மாணம் செய்ய சுமார் 75 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சிமெந்தினாலான இருக்கைகள், மற்றும் சுற்றுலா வருபவர்கள், நீரில் பிரயாணம் செய்ய இயந்திரப்படகுகள், நிழற்குடைகள் உட்பட ஏனைய தேவைகளும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த வேலைதிட்டமும் அதன் பராமரிப்புக்களும் சாவகச்சேரி பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.