ஆளுநர் அலுவலகத்திற் முன் தொண்டராசிரியர்கள் போராட்டம்

யாழ்.பழைய பூங்கா வளாகத்திற்குள் உள்ள வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொண்டராசிரியர்கள் இன்று(7) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று முன் தினம் ஒரு தொகுதி தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் ஆளுநர் அலுவலக்கதில் வழங்கப்பட்டன.

அதில் பதிவுகளில் குறைபாடுகள் உள்ளன எனக் காரணம் தெரிவித்து ஒரு தொகுதி தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்