யாழ்.மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆனோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் துணை முதல்வராக ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.