இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்றில் உந்துருளியில் வந்த இருவர், உந்துருளியில் சென்றவரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ள தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது: உந்துருளியில் பயணித்த விளையாட்டு நடுவரை பின்னால் மற்றோர் உந்துருளியில் வந்த இளைஞர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றனர். காயத்துக்கு உள்ளான நடுவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றதாகவும், தப்பிச் சென்றவர்கள் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் என்றும், தமது முதல் கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.