யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

ஆனைக்கோட்டை -குளாப்பிட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு முன்பாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் மேற்கைச் சேர்ந்த 54 வயதுடைய பொன்னுத்துரை யோகேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவரது மனைவி இந்தியாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு முன்பு இவர் தூங்கியுள்ளார். சும்பவத்தன்று இவர் அதிகளவு மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
அதிகாலை இவர் இறந்து கிடப்பதைக் கண்டு வீதியால் சென்றவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடிர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்