யாழ்ப்பாணம் ஏழாலையில் வீட்டில் தனியாக இருந்த குடும்ப பெண் சடலமாக மீட்பு

வீட்டில் தனியாக இருந்த குடும்ப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமானது, யாழ் ஏழாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச்சேர்ந்த 47 வயதுடைய குடும்ப பெண்ணின் கணவர் அவர்களது மகளை கல்விச் சுற்றுலாவிற்கு கூட்டிச்சென்ற காரணத்தினால், இப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்றையதினம் நீண்ட நேரமாக வீட்டில் ஆள்நடமாட்டம் காணப்படாததையடுத்து, அயலவர்கள் சென்று பார்த்தபோது குறித்த பெண் இறந்த நிலையில் கிணற்றில் காணப்பட்டுள்ளார்.

அதனையடுத்து சுன்னாகம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் இறந்த நிலையிலிருந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்