கற்கோவளம் புனித நகர் பகுதியில் 10கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் இன்று(04) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கபெற்றிருந்தது.
3கிலோ கஞ்சா இருப்பதாக சென்ற பொலிஸார் 10கிராம் அளவுடைய கஞ்சா பை மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
கைதான பெண்ணை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.