தமிழீழத் தேசியத் தலைவரை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
போராட்டத் தலைவராக பிரபாகரனை கூகிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது.
அந்நிறுவனத்தினால் பிரபாகரனின் முகத்திரை பக்கம் தற்போது புதுபிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் பயங்கரவாத அமைப்பின் தலைவராக பிரபாகரனை கூகிள் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் போராட்ட வீரனாக ஏற்றுக்கொண்டமை ஓட்டுமொத்த தமிழர்களுக்கும் மிகுந்த சந்தோசத்தை கொடுத்துள்ளது.
தாயகத்தில் ஆயுதம் மௌனிக்கப்பட்டாலும், புலத்தில் மாற்றுவடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலக்கை நோக்கி நகரும் தமிழினத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக இதனை கருதுவதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.