எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா அரசியலை விட்டே விலக முடிவெடுத்த போது அவருடனேயே உறுதுணையாக இருந்து தொடர்ந்து அரசியலில் செயல்பட ஊக்கம் அளித்தவர் நடராஜன் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா தெரிவித்துள்ளார்.
சந்திரலேகா மூலமே எம்ஜிஆர், ஜெயலலிதா என்று நடராஜன், சசிகலாவின் அரசியல் நகர்வுகள் தொடங்கின. இந்நிலையில் நடராஜன் உயிரிழந்ததையடுத்து சந்திரலேகா நடராஜனின் உடலை நேரில் வந்து பார்த்தார்.
எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. எம்ஜிஆர் இறந்த பிறகு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிய ஜெயலலிதா போது அவருடனே இருந்தவர் நடராஜன். ஜெயலலிதா முதல்வரானார் என்றால் அதற்கு முக்கிய காரணம் நடராஜன் தான் என்றும் சந்திரலேகா தெரிவித்துள்ளார்.