யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு முன்னால் வைத்து நபர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவசக்சேரி நீதிமன்றில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு வந்தவர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.