யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தனிப்பட்ட தகறாரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்