கூட்டமைப்பிற்குள் அதிருப்தி! சிவாஜிலிங்கத்தின் வலது கை சதீஸ் புறக்கணிப்பு?

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தேர்வில் ஒட்டுக்குழுக்களுடனும் , சிறிலங்கா அரசு கட்சிகளுடனும் கூட்டு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அதிருப்தி கிளம்பியுள்ளது.

நகரசபையின் முன்னாள் பிரதி தலைவர் சதீஸ், அதிருப்தியடைந்து, முதலாவது அமர்வை புறக்கணித்துள்ளார்.

இம்முறையும் பிரதி தலைவர் பதவியை அவர் எதிர்பார்த்திருந்தார். எனினும், கடந்த நிர்வாகத்தில் இருந்தவர்களை பொறுப்பான பதவிக்கு நியமிக்க கூடாதென பிரதேச மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இம்முறை அவர் நியமிக்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியடைந்துள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் வலது கையாக செயற்பட்டு வந்தவர் சதீஸ். வல்வெட்டித்துறை நகரசபை விவகாரத்தை கவனித்து வந்த சிவாஜிலிங்கம், தன்னை புறக்கணித்து விட்டார் என சதீஸ் அதிருப்தியடைந்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்