கைக்குண்டுடன் ஒருவர் கைது

கொட்டிகாவத்த பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்தனர்.

கொட்டிகாவத்த பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைக்குண்டு மற்றும் ஹெரோயின் 6 கிராம், 100 மில்லிகிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கொட்டிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையரே ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்