மட்டக்களப்பு நாவற்குடாவில் மீனவரொருவரின் மீன்பிடி வள்ளம் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாவிப் பகுதியிலே இந்த வள்ளம் இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.