தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா முப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது.அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரினால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தம் நடைபெற்று 9 வருடங்கள் கடந்த நிலையில் குறித்த அல்பத்தில் காணப்படும் புகைப்படங்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களுடையது என்பதை உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.