மட்டக்களப்பில் மாணவிகள் படையினரால் வன்புணர்வு!

இனப்படுகொலையாளிகளான சிறீலங்கா சிங்கள சிப்பாய்களால் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பனிச்சங்கேணி பாடசாலை மாணவிகள் இருவரே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 18 ம் திகதி குறித்த சிங்கள சிப்பாய்கள் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்று கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பதின்மூன்று மற்றும் பதினைந்து வயதினை உடையவர்களென தெரியவருகின்றது.

இதனிடையே இராணுவத்தின் அதிகாரிகள், சிங்கள இராணுவ சிப்பாய்களை முன்னிறுத்தக்கூடாதென பாதிக்கப்பட்ட சிறுமிகளது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அச்சுறுத்திவருகின்றனர்.

குறித்த சிறுமிகள் பள்ளிக்கு சென்று திரும்புகையில் கடத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் தேடி வந்த கிராமவாசிகள் மாலை 6 மணியளவில் அவர்களை கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மாணவிகளது பள்ளி மற்றும் மருத்துவமனை ஆகியவை சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளன. மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நகரத்திற்கு வடக்கே 58 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனிச்சங்கேணி சந்தியாகும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்