சுமந்திரனை அடித்து விரட்ட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை!

அவுஸ்திரேலிய அடியை சுமந்திரன் மறக்காமையினாலேயே காலியில் சமஸ்டித் தீர்வு எமக்கு வேண்டாம் என்று காலியில் சுமந்திரன் கூறியுள்ளாராவென முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருவேளை 2015இல் அவர் தேர்தலில் நின்றபோது சமஸ்டி வேண்டாம் தூசி தட்டிய 13வது திருத்தச்சட்டம் மட்டும் போதும் என்று எமது மக்களிடம் கூறிவாக்குப் பெற்றாரோ தெரியவில்லை. அல்லது சிங்களமக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ளவேண்டும் என்ற நினைப்பில் அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை. அல்லது காலியில் சிறப்பு அதிரடிப்படையினரின் பலமான பாதுகாப்பின் பின்னருந் தனக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்தது போல் பாதிப்பான வரவேற்பு கிடைக்குமோ என்று பயந்து அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை.

நான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஸ்டியே உகந்தது என்று சிங்கள மனங்களை மாற்றிவருகின்றேன். எனதினிய மாணாக்கர் தமிழ் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குகளை மறந்து,வடகிழக்கில் கூட சமஸ்டி வேண்டாம் என்று கூறுகின்றார் என்றால் அதுவும் ஒற்றையாட்சியின் கீழ் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியிருக்கும் 13வது திருத்தச்சட்டத்தைக் கோருகின்றார் என்றால் விரைவில் ஏதாவது பதவியொன்றை அவர் எதிர்பார்க்கின்றார் என்று அர்த்தம். அல்லது சிங்களவர்கள் மேலுள்ள பயமே காரணம் என்றும் நினைக்கலாம். அவரின் கருத்து அவரின் சுய கருத்தா அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கருத்தா என்பதை கூட்டமைப்பு தெளிபடுத்தவேண்டும். அவரின் கருத்து கூட்டமைப்பின் ஏகோபித்த கருத்தில்லை என்றால் ஒட்டுமொத்தம் அவர் போன்றவர்களை சம்பந்தனும் மற்றைய கட்சித் தலைவர்களும் சேர்ந்து அஸ்மின் கூறிய பாணியில் விரட்டி அடிக்கவேண்டும்!

ஐம்பதுக்கு ஐம்பது கோரி,சமஸ்டி கோரி, தனிநாடுகோரி வந்த தமிழருக்கு 13ம் திருத்தச் சட்டத்தை மட்டும் தந்தால்ப்போதும் என்று அவர்கள் சார்பில் கூறுவதற்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும் அவருக்கெனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்