ராகுல் காந்தி, மன்மோகன் சிங்குடன் மகிந்த சந்திப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புரமணிய சுவாமி ஆரம்பித்த விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக நேற்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறிலங்கா முன்னாள் அதிபர் ராஜபக்ச சுப்புரமணிய சாமி அழைப்பு விடுத்து இருந்தார்.

அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே டெல்லி வந்தடைந்தார். ராஜபக்சே, தனது மகன் நமல் ராஜபக்சேவுடன் சேர்ந்து நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருந்தர். இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்