வடமராட்சி கிழக்கு வாடிகளை அகற்ற உத்தரவு!

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை உடனடியாக வெளியேற்ற கிளிநொச்சி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மருதங்கேணி பிரதேசசெயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணிகளை வாடகைக்கு பெற்று வாடிகளை அமைத்து அவர்கள் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் அனுமதிக்கப்பட்ட பகல் நேரம் மற்றும் கடற்கரையிலிருந்து ஜந்து கிலோமீற்றரிற்கு அப்பால் எனும் நிபந்தனைகளை மீறி தொழிலி;ல் அவர்கள் ஈடுபடுவதால் உள்ளுர் மீனவர்களுடன் மோதல்நிலை தொடர்கின்றது.

எனினும் தென்னிலங்கை மீனவர்களிற்கான வாடிகளை அமைக்க மருதங்கேணி பிரதேச செயலகம் அனுமதி மறுத்திருந்தததுடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்ற கிளிநொச்சி நீதிமன்றினை நாடியிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்