சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் உச்சக்கட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைவதாக அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையினை ஆற்றவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.