சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் பெண் போராளிகளுக்கு புலம் பெயர் சமூகம் உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் உறுப்பினரான சுப்ரமணியம் தவமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தாம் அனுபவித்த வேதனைகள் எதனையும் பொருட்படுத்தியதில்லை என தெரிவித்த அவர், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.