மூன்று மாதத்தில் அரசாங்கம் கவிழும் – வாசு ஆரூடம்

நாட்டில் தற்போது நீதிமன்றம் நியமித்த பிரதமரும், அமைச்சரவையும் இருப்பதாகவும், இந்த அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பகிரங்கப்படுத்தியுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிச்சயமாக அரசாங்கத்தை கவிழ்க்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சில காரணங்களால், தற்போதை அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது. பொதுத் தேர்தல் நடத்தப்படவிருந்த சந்தர்ப்பத்தை உயர் நீதிமன்றம் நிறுத்தியது.

இதன் காரணமாவே நீதிமன்ற பிரதமரும், அமைச்சரவையும் உருவாகியது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்