யாழில் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கை

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்