கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இது வரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 69 பேர் குற்றவியல் விசாரணை பிரிவிலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.