யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் இன்று (23) சனிக்கிழமை காலை எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்தக் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் குறித்த கஞ்சா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த கஞ்சா போதைப்பொருள் குற்றத்துக்கான 20 வழக்குகளின் சான்றுப்பொருள்களை எரித்து அழிக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் அவற்றை எரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன் முன்னெடுத்தார்.

நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் முன்னிலையில் அதிரடி…

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையில் உள்ள வெற்றுக் காணியில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகளும் உடைத்துக் குவிக்கப்பட்டன. மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவை தீயிட்டு அழிக்கப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2 ஆயிரத்து 500 கிலோக் கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளமையால் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு போதைப் பொருட் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா, போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்வதில் இறுக்கமான நடைமுறை பேணப்படுமா என்பது தொடர்பா மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்