தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் வீரமரணமடைந்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை சோதனை சாவடியை குறிவைத்து ‌இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர் இருவரும், ஒரு போலீஸ்காரரும் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பில் ஈடுப‌ட்டுள்ள பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகளும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்