சிறிலங்கா இராணுவத்திற்கு பசுப்பால் விற்பனை செய்வதற்கான யோசனை நிராகரிப்பு

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு நிராகரித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை எங்களிடம் முன்வைத்தது என தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் எனினும் இலட்ச்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை நிராகரித்துவிட்டார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்று தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிற்கு ஆவின்பாலை விநியோகிப்பதற்கான யோசனை குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்கள் உட்பட சாதாரண மக்களிற்கு நாங்கள் ஆவின்பால் விநியோகத்தினை மேற்கொள்ள தயாராகயிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்