கஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றமையினை முன்னிட்டு இன்று காலை 11.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வை நடாத்தினார்கள்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தியாகத் தீபம் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மேலும் மலர் அஞ்சலி இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் வேட்பாளர்களான செல்வராஜா கஜேந்திரன், க.சுகாஷ், திருமதி வாசுகி சுதாகர், க.காண்டீபன், டிலான் பத்மநாதன், ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் செயற்பாட்டாள ர்களும் பங்குபற்றினார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்