தமிழர் பகுதிகளில் போதை வஸ்த்து வினியோகத்தில் இராணுவத்தினர்-த.தே.ம.மு

வடக்கு-கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார்.

வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரையில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது மிக முக்கியமானது வடக்கு கிழக்கில் போதைக்கு அடிமையாதல் என்பது, மிகப் பெரும் பிரச்னையாக உருவாகிவருகின்றது.

ஏனென்றால்-இலங்கை அரசானது இன்னும் ஆயுதக் கிளர்ச்சியை தோற்கடிக்கும் மனோநிலையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் முப்படைகள் ஊடாகவே போதைப் பொருள் பாவனை ஊக்குவிக் கப்படுகின்றது.

அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடனேயே அவை நடைபெறுகின்றன. இராணுவம் தான் நோரடியாகவே அந்த செயற்பாட்டை செய்துவருகின்றது.

அப்படியான ஒரு சூழலில் வடக்கு-கிழக்கில் மிகப்பெரும் அளவிலான இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாக் கப்பட்டு மோசமான நிலைமைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

எனவே பாடசாலைகளில் உளவள செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும். பாதிக்கப்படுபவர்களை ஏதோ ஒரு வழியில் அதிலிருந்து மீட்கவேண்டு மாயின் அத்தகைய உளவள செயற்பாடுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்குரிய மனோநிலையை உருவாக்கி, அவர்களை நற்பிரஜைகளாக்கு வதை விடுத்து, மாறாக அவர்களை குற்றவாளிகளாக்கி சமூ கத்திலிருந்து அவர்களை ஒதுக்கும் நிலைமையையே உருவாக் கியிருக்கிறது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்