மாணவி உயிர் மாய்ப்பு: காதலன் கைது!

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11ம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தந்தை பிரிந்த நிலையில், தாயும் வெளிநாடு சென்றுள்ளார். குறித்த மாணவி வயதான தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு காதலனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி தனது பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்டதால் கடும் நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் தனது காதலனால் முச்சக்கர வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே மாத்திரைகளை உட்கொண்டதாக அவர் தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காதலனை கைது செய்த பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்