சமூகவிரோதச் செயலில் ஈடுபடும் நபர்களினால் முல்லைத்தீவு,மல்லாவி மாணவிகள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் 14 வயது பாடசாலை மாணவிகள் கருத்து தெரிவிக்கையில்,
எங்களுடன் படித்த சகதோழி ஒருவர் திடீரென பாடசாலை வருவதை நிருத்திக்கொண்டார் அதற்கு காரணம் என்னவென நாங்கள் கேட்டபோது அவர் கர்பம்மடைந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த தகவலை கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்ததுடன் அச்சமடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களின் அநாவசிய நடமாட்டங்களும் அதிகரித்துள்ளதாகவும் இதனால் அந்த பகுதி சிறுமிகள் உள்ளிட்ட யுவதிகள் அச்சமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.