தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் – சம்பந்தன்!

சிறிலங்காவில் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினம் கொழும்பில் நினைவுகூரப்பட்டது. ‘காணாமல்போதல் இனியும் வேண்டாம்’ எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமலாக்கப்பட்டோரின் பட்டியலை அரசாங்கம் உடனடியாக வெளியிடவேண்டுமென வலியுறுத்தியதோடு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பணியகத்தை அரசாங்கம் விரைவாக செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெருமளவிலான காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், அமைச்சர் மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், சமூகச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர்கலந்துகொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்